திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தீராத வயிற்று வலியை போக்க உதவும் அருமருந்து

வயிற்றுப் புண், செரிமானக் கோளாறு மற்றும் தீராத வயிற்று வலியை போக்க உதவும் அருமருந்து 

News image
stomach ache
Updated On :31 ஜனவரி 2024, 1:14 pm

கோவை பாலா

பூசணிக்காய் விதை குடைவாழை அரிசிக் கஞ்சி

தேவையான பொருட்கள்
 
வெண் பூசணி விதை - 100  கிராம்
அரசாணிக்காய் விதை - 100 கிராம்
குடைவாழை அரிசி - 100  கிராம்
பாசிப்பருப்பு - 50  கிராம்
வெந்தயம் - 100 கிராம்
தயிர் - சிறிதளவு

செய்முறை

  • முதலில் வெண் பூசணி விதை, அரசாணிக்காய் விதை மற்றும் வெந்தயம் மூன்றையும் வாணலியில் லேசாக வறுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
  • குடைவாழை அரிசியை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.
  • பாசிப்பருப்பையும் சிறிது நேரம் ஊறவைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி  கொதிக்கவைத்து அதில் ஊறவைத்துள்ள அரிசி மற்றும் பாசிப்பருப்பைச் சேர்த்து வேக வைக்கவும்.
  • அரிசி நன்கு வெந்து கஞ்சி பதம் வந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள பொடியில் பத்து கிராம் அளவு எடுத்து கஞ்சியுடன் சேர்த்து கலக்கி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்து அதில் தயிர் சேர்த்து பருகவும்.

பயன்கள்

இந்தக் கஞ்சி வயிற்றுப் புண், செரிமானக் கோளாறு மற்றும் தீராத வயிற்று வலி உள்ளவர்களுக்கு அருமருந்தாகும்.

சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு உன்னதமான உணவுக் கஞ்சி.

இதனை தினமும் ஒருவேளை உணவாக உட்கொண்டு வந்தால் ஜீரணசக்தியை அதிகரித்து குடல் சார்ந்த நோய்களை நீக்கும் அதிஅற்புதமான உணவுக் கஞ்சி.

படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609,  73737 10080
Covaibala15@gmail.com  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.