/

காச நோயை குணப்படுத்தும் கண்கண்ட நெய்

முதலில் சீரகம், கருஞ்சீரகம், திரிகடுகம் இவை மூன்றையும் பாலுடன் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:18 am

கோவை பாலா

தூதுவளை நெய்

தேவையான பொருட்கள்

தூதுவளைச் சாறு - 300 மி.லி
பசும் பால் - 300 மி.லி
சுத்தமான நெய் - 400 மி.லி
சீரகம் - 15 கிராம்
கருஞ்சீரகம் - 15 கிராம்
திரிகடுகம் - 15 கிராம்

செய்முறை : முதலில் சீரகம், கருஞ்சீரகம், திரிகடுகம் இவை மூன்றையும் பாலுடன் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். பின்னர் நெய்யை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக உருக்கி அதனுடன் தூதவளைச் சாறு மற்றும் வடிகட்டி வைத்துள்ள பால் இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலக்கி நன்கு காய்ச்சி பதத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும்.

பயன்கள் : இந்த நெய்யை தினமும் காலை மாலை என இருவேளையும் ஒரு தேக்கரண்டி வீதம் எடுக்கவும். காசநோயினால் உண்டாகும் சுரம், ரத்தமின்மை, இருமல், இரைப்பு ஆகியவற்றை நீக்கும் அற்புதமான நெய் தூதுவளை நெய்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.