ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

வெயிலுக்கு இதமாக ஒரு க்ளாஸ் வெள்ளரி சூப் தயாரித்து சாப்பிடுங்கள்! இதோ ரெசிபி!

இரண்டு வெள்ளரிக்காயை பாதியாக வெட்டி, அவற்றின் தோலைச் சீவி, பொடியாக நறுக்கித் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

News image
Updated On :2 ஏப்ரல் 2018, 10:07 am

தேவையானவை :

வெள்ளரிக்காய் - 2
உருளைக்கிழங்கு - 2 
பால் - 2 கப்
நெய் - 2 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

Story image

செய்முறை

இரண்டு வெள்ளரிக்காயை பாதியாக வெட்டி, அவற்றின் தோலைச் சீவி, பொடியாக நறுக்கித் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். (விதை பிடிக்காது என்பவர்கள் அதனை நீக்கிவிடலாம், ஆனால் விதையுடன் சாப்பிடுவதான் உடலுக்கு நல்லது)

மீதி பாதி வெள்ளரிகளை மற்றும் உருளைக்கிழங்குகளை தோல் சீவி சேர்த்து நன்கு விழுதாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மிகவும் திக்காக இருப்பதாகத் தோன்றினால் சிறிதளவு நீர் விட்டுக் கொள்ளலாம்.

வாணலியில் நெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெள்ளிக்காயை லேசாக வதக்கவும். பின் பால் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைத்தபின்னர், அரைத்து வைத்த விழுதை சேர்க்கவும். 3 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும். சூப் தயார்.

இதில் வெள்ளை மிளகுத் தூள் மற்றும் உப்பைப் போட்டு நன்றாக கலக்கி சூடாகப் பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.