/

ஆஸ்துமா, நுரையீரல் மற்றும் சைனஸ் குறைபாட்டை முழுமையாக குணப்படுத்தும் அற்புதமான ரசம்

முதலில் ஒரு லிட்டர் தண்ணீரில் கண்டங்கத்திரி இலையை போட்டு நன்றாக கொதிக்க வைத்து பாதியாக சுண்ட வைத்துக் கொள்ளவும்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:29 am

கோவை பாலா

கண்டங்கத்திரி மிளகு ரசம்

தேவையான பொருட்கள்

கண்டங்கத்திரி இலை - 100 கிராம்
தக்காளி - 4
மிளகு - 20 கிராம்
இஞ்சி - 10 கிராம்
பூண்டு - 10 கிராம்
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
உப்பு , மஞ்சள் - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை : முதலில் ஒரு லிட்டர் தண்ணீரில் கண்டங்கத்திரி இலையை போட்டு நன்றாக கொதிக்க வைத்து பாதியாக சுண்ட வைத்துக் கொள்ளவும். பின்பு தக்காளியை நன்றாக கழுவி அரிந்து சுண்ட வைத்தது தண்ணீரில் போட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதனுடன் மிளகு, சீரகம், இஞ்சி, மல்லித் தழை, கறிவேப்பிலை, மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் கண்டங்கத்தரி  கரைசலுடன் வதக்கியவற்றை சேர்த்து  சூடு செய்யவும். நுரை வரும் பதம் வந்தவுடன் இறக்கி வைக்கவும்.

பலன்கள் : இந்த ரசத்தை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா, நுரையீரல் மற்றும் சைனஸ், சளி, இருமல் ஆகியவற்றை குணப்படுத்து நுரையீரலை வலுப்படுத்தும் அற்புதமான ரசம்.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.