நாகராஜ் இதுவரை ஒன்றரை லட்சம் ரூபாய்க்கும் மேலாக தமது மகளின் சிகிச்சைக்காக செலவளித்தும் அதனால் எந்தவித பலனும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அவளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து அறிய முடியாமலும், மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப் பணமில்லாமலும் தவிக்கும் நாகராஜ், ‘நான் போகாத மருத்துவமனை இல்லை, போகாத கோயில் இல்லை, எங்கே போனாலும் நார்மல், நார்மல் என்று தான் சொல்கிறார்கள். இதற்கு மேல் என்ன செய்வதென்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. அரசாங்கம் நடவடிக்கை எடுத்து, கலெக்டர் நடவடிக்கை எடுத்து எங்கள் மகளின் உடலில் ஏற்படும் ரத்தக் கசிவை நிறுத்த வழி சொன்னால் அதுவே எங்களுக்குப் போதும். அதற்காக அவர்கள் எங்கே போகச் சொன்னாலும் செல்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். நல்ல முறையில் சிகிச்சையளித்து என் மகளுக்கு குணமானால் அதுவே எனக்குப் போதும்’ என்கிறார் நாகராஜ்.