அதனால் மருத்துவரின் தகுந்த ஆலோசனைக்குப் பிறகு மட்டுமே மேற்கண்ட மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, மருத்துவர் ஆலோசனை இன்றி வழக்கமாக காய்ச்சல், தலைவலி, உடல்வலிக்கு நாம் எடுத்துக் கொள்ளும் பாராசிட்டமால், ஜெலூசில், சாரிடான், குரோசின் மாத்திரைகளைப் போல ஆஸ்பிரினையும் மருத்துவர் ஆலோசனைகள் இன்றி அடிக்கடி எடுத்துக்கொள்வது உயிராபத்தில் கொண்டு நிறுத்தலாம். ஆஸ்பிரின் மாத்திரமல்ல மேற்கண்ட பிற மாத்திரைகளையும் கூட அடிக்கடி எடுத்துக் கொள்வது ஆபத்தானதே! மருந்து, மாத்திரைகளைப் பொறுத்தவரை மருத்துவர் ஆலோசனையோ, பரிந்துரையோ இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் முயற்சி செய்வது தவறு. அதை விட, வீட்டு வைத்தியமாகவோ அல்லது பாட்டி வைத்தியமாகவோ பாரம்பரியமாகப் பின்பற்றி நற்பலன் தந்து கொண்டிருக்கும் முறைகள் எதையாவது முயற்சி செய்யலாம். அதாவது இம்மாதிரியான மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் இருக்கையில் மருத்துவ ஆலோசனை பெற வகையில்லாத போதிலாவது!