உமிழ்நீர் கோளங்களைச் சுறுசுறுப்பாக்கி திட உணவு சாப்பிடச் செய்வதில் இஞ்சிச் சாறு சிறந்தது. 200 மி.லி. இஞ்சிச் சாறு பிழிந்து, சிறிது நேரம் வைத்திருக்க சாறு தெளியும். அடியில் படிந்துள்ள சுண்ணாம்பு போன்றவற்றை அகற்றித் தெளிந்த சாறை 200 கிராம் சர்க்கரையுடன் கலந்து இளந்தீயில் காய்ச்சி பானகமாக்கி வடிகட்டி குங்குமப்பூ, ஏலம், ஜாதிக்காய், கிராம்பு வகைக்கு 1 கிராம், பச்சைக் கற்பூரம் 1/2 கிராம் கலந்து வைத்திருந்து உணவுக்கு முன் சாப்பிடக் கொடுக்கவும். உமிழ்நீர் சுரப்பி நன்றாக வேலை செய்யத் தொடங்கும். திட உணவை எளிதில் ஏற்கச் செய்யும். பசி, ஜீரண சக்தி அதிகமாகும். வயிற்றுக் கனம், உண்டவுடன் அசதி, தலை சுற்றுதல் போன்றவை நீங்கும்.