சென்னை: ஏப்ரல், 1 - கோடை காலம் துவங்கி, சென்னை நகர மக்களின் குடிநீர்த் தேவை அதிகரித்துள்ளதால், புழலேரியிலிருந்து அன்றாடம் வழங்கப்படும் குடிநீரின் அளவு 4.3 கோடி காலனிலிருந்து 4.4 கோடி காலனாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கார்பொரேஷன் சிறப்பதிகாரி டி. வி. அந்தோனி இன்று நிருபர்களிடம் கூறினார்.
இந்த அதிகரிப்பு இன்று காலை முதலே அமுல்படுத்தப்பட்டுவிட்டது; இந்த அளவும் மேலும் படிப்படியாக உயர்த்தப்பட்டு ஏப்ரல் 16ம் தேதி முதல் 4.5 கோடி காலனாக உயர்த்தப்படும் என்றும் அந்தோனி மேலும் கூறினார்.
அவசியத் தேவையாகிய குடிநீரினை தோட்டங்களுக்குப் பாய்ச்சுதல் போன்ற செயல்கள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். மீறி யாராவது தவறாக பயன்படுத்தி அது கண்டுபிடிக்கப்படுமேயானால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் தண்ணீர் வழங்குதல் உடனடியாகத் துண்டிக்கப்படும் என்று கார்ப்பரேஷன் சிறப்பதிகாரி சுடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் அறிக்கைகளில் முரண்பாடுகள் - மத்திய மந்திரி தகவல்
புதுடில்லி, ஏப். 1- பரஸ்பர அக்கறையுடைய எல்லா விஷயங்கள் பற்றியும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராயிருப்பதாக பாகிஸ்தானின் பாதுகாப்பு, வெளி உறவு துணை அமைச்சர் கூறியிருப்பதை இந்தியா கவனத்தில் எடுத்துக் கொண்டிருப்பதாக இன்று லோக் சபையில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பாகிஸ்தான் அரசின் அறிக்கைகளிலும் போக்குகளிலும் முரண்பாடுகள் காணப்படுவதாக உதவி, வெளிநாட்டு மந்திரி விபின்பால் தாஸ் கூறினார்.
சமாதான முறைகள் மூலம் நேரடியாக எல்லாத் தகராறுகளையும் தீர்த்துக் கொள்ள பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த இந்தியா இப்போதும் தயாராயிருப்பதாக அவர் ஊர்ஜிதம் செய்தார்.
பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க இந்தியாவோ அல்லது பாகிஸ்தானோ உருப்படியான யோசனை எதையாவது தெரிவித்திருக்கிறதா என்று கேட்டபோது, உறவை சகஜப்படுத்துவதற்காக மேற்கொண்டு சாத்தியக்கூறுகளை ஆராயும் பொருட்டு பாகிஸ்தானுடன் கடிதப் போக்குவரத்து தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறதுஎன்று பிபின்பால்தாஸ் கூறினார். விமானப் பயணங்கள் பற்றி பாகிஸ்தானின் யோசனை குறித்தும் கருத்துக்கள் பரிவர்த்தனை நடந்துள்ளன என்றார்.
Summary
April 2, 1976: Summer Drinking Water for Chennai City
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கோட்டைக்கு கோடைகால சிறப்பு ரயில்களை இயக்க முடிவு

16.4.1976: மக்களைப் பிளவுபடுத்த மொழியைக் கருவியாக பயன்படுத்தக் கூடாது: சென்னையில் ராஷ்டிரபதி உரை
சென்னை தி. நகரில் ரூ. 29 கோடி தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்!

சென்னையில் தீ விபத்து! ரூ. 1 கோடி மதிப்பிலான கார் உதிரி பாகங்கள் எரிந்து நாசம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



