30 மாரத்தான்களில் பங்கேற்று எஸ்பிஐ வங்கி அதிகாரி சாதனை
கேரள மாநிலம் அலுவா மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்பிஐ வங்கி அதிகாரி 30 மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்று சாதனைப் படைத்துள்ளார்.


கேரள மாநிலம் அலுவா மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்பிஐ வங்கி அதிகாரி 30 மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்று சாதனைப் படைத்துள்ளார்.
நிக்ஸன் ஜோசப், எஸ்பிஐ வங்கியின் முதன்மை செயல் அதிகாரிகள் அமைப்பின் தலைவராக உள்ளார். 57 வயதான நிக்ஸன், சமீபத்தில் தான் 25 மாரத்தான் ஓட்டங்களை முழுமையாக நிறைவு செய்ததற்காக பாராட்டுக்குரியவரானார்.
இந்நிலையில், 2.7 லட்சம் ஊழியர்களுடன் நடைபெற்ற வங்கிகளின் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றதன் மூலம் 30 மாரத்தான் ஓட்டங்களில் கலந்துகொண்ட முதல் வங்கி ஊழியர் என்ற சாதனையைப் படைத்தார்.
டோக்கியோ, ஒஸாகா, கோபே, ஹோக்கய்டோ, பூகேட், சிங்கப்பூர், பெங்களூரு, ஹைதராபாத், ஷில்லாங், சிரப்பூஞ்சி, தில்லி, குருக்கிராமம், சதாரா, புணே, மும்பை போன்ற பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டங்களில் பங்கெடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...