புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

இந்திய விமானப்படையில் வேலை வேண்டுமா?

இந்திய விமானப்படையில் பிளையிங் அண்டு கிரவுண்ட் டியூட்டி பிரிவில் காலியிடங்களை நிரப்புதற்கான வேலைவாய்ப்பு தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :22 ஜூன் 2023, 6:59 am


இந்திய விமானப்படையில் பிளையிங் அண்டு கிரவுண்ட் டியூட்டி பிரிவில் காலியிடங்களை நிரப்புதற்கான வேலைவாய்ப்பு தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இரு பாலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: ஏ.எப்.சி.ஏ.டி., என்ட்ரி பிரிவில் பிளையிங் 11, கிரவுண்ட் டியூட்டி 265 (டெக்னிக்கல் 151, நான் டெக்னிக்கல் 114) என மொத்தம் 276 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளையிங் பிரிவுக்கு குறைந்தது 50 சதவிகித மதிப்பெண்ணுடன் பிளஸ் 2, குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்ணுடன் டிகிரி முடித்திருக்க வேண்டும். 

கிரவுண்ட் டியூட்டி டெக்னிக்கல் பிரிவுக்கு பொறியியல் துறையில் பட்டம். நான் டெக்னிக்கல் பிரிவுக்கு ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.7.2024 தேதியின்படி பிளையிங் பிரிவுக்கு 20 - 24 வயதிற்குள்ளும், கிரவுண்ட் டியூட்டி பிரிவிக்கு 20 - 26 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு, உடல்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம் : சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, வேலூர்

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 30.6.2023

மேலும் விவரங்கள் அறிய  afcat.cdac.in/AFCAT என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.