தவெக ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெறும்! கிரிஷ் சோடங்கர் மு.க. ஸ்டாலினுடன் ரஜினி சந்திப்பு! பனையூரில் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு!வரும் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார்! தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!
/

வங்கியில் வேலை வேண்டுமா? - அழைக்கிறது கரூர் வைஸ்யா வங்கி!

கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள 1,284 சிறப்பு அலுவலர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...

News image

கரூர் வைஸ்யா வங்கியில் 1,284 சிறப்பு அலுவலர்கள் பணி - KVB

Updated On :3 மே 2026, 5:16 pm IST

தனியார் துறையைச் சார்ந்த பிரபல வங்கியான கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள 1,284 சிறப்பு அலுவலர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Specialist Officer

மொத்த காலியிடங்கள்: 1,284

தகுதி : ஏதாவதொரு இளநிலைப் பட்டப்படிப்பை முடித்து வங்கி, விற்பனை, சந்தையியல், டிஜிட்டல் மார்க்கெட்டிங்க் போன்ற வங்கிகள் சார்ந்த துறையில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நிதியியல், சந்தையியல் பிரிவில் எம்பிஏ, சிஏ, ஐசிடபுள்யுஏ முடித்திருந்தால் விரும்பத்தக்கது.

சம்பளம்: பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு வங்கி விதிமுறைப்படி வழங்கப்படும்.

வயது வரம்பு : 21 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு தொடர்பான அனைத்து விபரங்களும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.kvb.bank.in இணையதளம் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்ப வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

karur Vysya Bank has Announced a total of 1284 vacancies for various Positions

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.