
வ.உ.சி. துறைமுக ஆணையத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் காலியாகவுள்ள கன்சல்டன்ட் பணிகளுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையத்தில் வேலை - V.O.C
வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் காலியாகவுள்ள கன்சல்டன்ட் பணிகளுக்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: GAD - EST 10 ESTC/3/2025-GAD (7392). D. 1068
பணி: Consultant
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.60,000
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பிரிவில் பிஇ முடித்து 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Associate Consultant
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.50,000
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்று எச்ஆர் பிரிவில் எம்பிஏ முடித்து, 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Professional Intern
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.30,000
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு, தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.vocport.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்து, விண்ணப்பத்தின் வலது மூலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒட்டி கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Secretary, V.O. Chidam-baranar Port Authority, Administrative Office Building, Harbour Estate, Tuticorin - 628 004.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 14.7.2026
Summary
V.O.Chidambaranar Port Authority invites applications for recruitment of onsultant, Associate Consultant posts by....
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







