நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

விண்ணப்பித்துவிட்டீர்களா..? நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் அலுவலர் வேலை!

மும்பையில் செயல்பட்டு வரும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 170 அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் லிமிடெட்
Updated On :24 செப்டம்பர் 2024, 3:29 am

DIN

மும்பையில் செயல்பட்டு வரும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 170 அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Administrative Officers (Generalists & Specialists) (Scale-I)

காலியிடங்கள்: 170

துறைவாரியான காலியிடங்கள்:

1. Accounts - 50

தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருப்பதுடன் சிஏ முடித்திருக்க வேண்டும் அல்லது நிதியியல் பிரிவில் எம்பிஏ., எம்.காம் முடித்திருக்க வேண்டும்.

2. Generalists - 120

தகுதி: ஏதாவதொரு துரையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.50,925 - 96,765

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு இரண்டு நிலைகளாக நடத்தப்படும். முதற்கட்டத் தேர்வு அக்டோர் 13 ஆம் தேதி நடைபெறும்.

தமிழ்நாட்டில் தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலீர், நாகர்கோவில்.முதன்மைத் தேர்வு நவம்பர் 17 ஆம் தேதி சென்னையில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.100, இதர அனைத்து பிரிவினரும் ரூ.850 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.newindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 29.10.2024

மேலும் விவரங்கள் அறிய https://www.newindia.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.