தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சூப்பர்வைசர், டெக்னீசியன் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

செக்யூரிட்டி பிரிண்டிங் பிரஸ், ஹைதராபாத் -இல் காலியாக உள்ள சூப்பர்வைசர் மற்றும் டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு

News image
Updated On :7 ஏப்ரல் 2024, 9:18 am

ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் செக்யூரிட்டி பிரிண்டிங் பிரஸ், ஹைதராபாத்(Security Printing Press)-இல் காலியாக உள்ள சூப்பர்வைசர் மற்றும் டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்.01/2024 தேதி: 15.3.2024

பணி: Supervisor

பிரிவு: TO-Printing

காலியிடங்கள்: 2

தகுதி: பிரிண்டிங் டெக்னாலஜி பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Tech Control

காலியிடங்கள்: 5

தகுதி: பிரிண்டிங், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: OL

காலியிடங்கள்: 1

தகுதி: ஹிந்தி, ஆங்கிலத்தில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்தில் இருந்து ஹிந்திக்கும் மொழிபெயர்ப்பு செய்வதில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ணி: Jr.Office Assistant

காலியிடங்கள்: 12

வயதுவரம்பு: 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி அறிவும், நிமிடத்திற்கு ஆங்கிலம் 40 வார்த்தைகளும், ஹிந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Technician

பிரிவு: Printing/Control

காலியிடங்கள்: 68

தகுதி: பிரிண்டிங்க் டெக்னாலஜி பிரிவில் ஐடிஐ, டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பிரிவு: Fitter - 3

பிரிவு: Welder - 1

பிரிவு: Electronics,Instrumentation - 3

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Fireman - 1

வயதுவரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பையர்மேன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 165 செ.மீ உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 79 செ.மீட்டரும், 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும். நல்ல பார்வைத் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.200. இதர அனைத்து பிரிவினரும் ரூ.600. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://spphyderabad.spmcil.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.4.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.