மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான (எஸ்எஸ்சி) 2023 ஆம் ஆண்டிற்கான ஆண்டு தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒருங்கிணைந்த பட்டதாரி அளிவிலான தேர்வு, 2022(நிலை-1)-க்கான அறிவிப்பு வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி வெளியிடப்பட்டும். இணையதளம் மூலம் அக்டோபர் 1 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். எழுத்துத் தேர்வு 2022 டிசம்பர் மாதம் நடைபெறும்.
ஒருங்கிணைந்த மேல்நிலை(10+2) அளவிலான தேர்வு(முதல் நிலை) 2022-க்கான அறிவிப்பு வரும் நவம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியிடப்படும். டிசம்பர் 4 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மாதம் 2023 ஜனவரி-பிப்ரவரி மாதம் நடைபெறும்.
இளநிலை பொாறியாளர் (முதல் தாள்) தேர்வு, 2022-க்கான அறிவிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வெளியிடப்பட்டும். இணையதளம் மூலம் செப்டம்பர் வரை விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு 2022 நவம்பர் மாதம் நடைபெறும்.
காவலர் நிலையிலான பணிகளுக்கான அறிவிப்பு (மத்திய ஆயுதக் காவல்படை, அசாம் ரைபிள்) வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி வெளியிடப்படும். 2023 ஜனவரி 19 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 2023 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் எழுத்து தேர்வு நடைபெறும்.

சார்-ஆய்வாளர் பணி-2022-க்கான (தில்லி காவல்துறை, சிஏபிஎஃப்) அறிவிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வெளியிடப்படும். ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். வரும் நவம்பர் மாதம் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
சுருக்கெழுத்தாளர் நிலை சி மற்றும் டி தேர்வு 2022(முதல்நிலை தேர்வுக்கான அறிவிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி வெளியிடப்பட்டும். செப்டம்பர் 5 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். நவம்பர் மாதம் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
பன்னோக்கு(தொழில்நுட்பம் சாராத) பணியாளர் தேர்வு 2022-க்கான அறிவிப்பு 2023 ஜனவரி மாதம் 12 ஆம் தேதி வெளியிடப்படும். பிப்ரவரி 24 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 2023 ஏப்ரல் - மே மாதங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சாந்தினி சௌக்கிலிருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு: ஒருவா் கைது

குருகிராம்: இரும்புப் பெட்டிக்குள் விநியோக ஊழியரின் சடலம் - போலீஸாா் விசாரணை

ஐஆா்எஸ் அதிகாரி மகள் கொலை வழக்கில் கைதானவருக்கு 7 நாள்கள் நீதிமன்ற காவல்

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


