ரூ.2.50 லட்சம் சம்பளத்தில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?
தமிழக அரசிற்கு உள்பட்ட வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் துறையில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


தமிழக அரசிற்கு உள்பட்ட வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் துறையில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம்: வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL)
மொத்த காலியிடங்கள்: 500
பணி: Staff Nurse
தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ நர்சிங், பி.எஸ்சி., எம்.எஸ்சி., நர்சிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 22 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா...? டிஜிட்டல் இந்தியாவில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்..?
சம்பளம்: மாதம் ரூ.2 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.2,50 லட்சம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.omcmanpower.com எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.08.2021
மேலும் விபரங்கள் www.omcmanpower.com அல்லது https://www.omcmanpower.com/jobInfo.php?jid=153 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...