கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்... பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் வேலை
நீதிமன்றங்களின் தலைமை நீதிமன்றமான இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 78 நீதிமன்ற ஜூனியர் அண்டெண்டென்ட், சேம்பர் அட்டெண்டண்ட்


நீதிமன்றங்களின் தலைமை நீதிமன்றமான இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 78 நீதிமன்ற ஜூனியர் அண்டெண்டென்ட், சேம்பர் அட்டெண்டண்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 78
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Court Attendant
காலியிடங்கள்: 65
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 33,315
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்த்தப்பட்ட பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.03.2018 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
பணி: Chamber Attendant
காலியிடங்கள்: 13
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 33,315
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.03.2018 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.150 கட்டணமாக செலுத்தினால் போதுமானது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு வினாக்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அமைந்திருக்கும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.04.2018
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://supremecourtofindia.nic.in/pdf/recruitment/recruitement20032018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...