ஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

வேலை... வேலை.. வேலை... நாளை 7,411 பணியிடங்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்: வாய்ப்பை தவறவிடாதீர்கள் 

திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நாளை சனிக்கிழமை (மார்ச்.17) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:29 pm

ஆர். வெங்கடேசன்

திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நாளை சனிக்கிழமை (மார்ச்.17) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் சுமார் 7 ஆயிரத்து 411 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்தி பயன் பெறவும். 

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலைவய்ப்பு அலுவலகம், மகளிர் திட்டம் ஆகியவை இணைந்து இளைஞர்களுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. 

காலியிடங்கள்: சுமார் 7,411

தகுதி: 8, 10, 12-ஆம் வகுப்பு, பட்டயப்படிப்பு, ஐடிஐ, பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள், மற்றும் கல்வி பயிலாதவர்கள் என அவரவர் தகுத்திக்கேற்ப தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

இந்த முகாமில் பல்வேறு தொழில்நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான ஆள்களை நேரடியாக தேர்வு செய்யவுள்ளனர். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், இளம் பெண்கள் என இருபாலரும் இந்த முகாமில் பங்கேற்கலாம். 

கொண்டுவர வேண்டிய சான்றுகள்: வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க வரும் அனைவரும் தங்களது சுயவிவரக் குறிப்புடன், கல்விச்சான்று, இருப்பிடச்சான்று, புகைப்படம் மற்றும் இதர சான்றுகளின் நகல்களுடன் வரவேண்டும். 

முகாம் நடைபெறும் இடம்: பாரதிதாசன் பல்கலைக்கழகம், காஜாமலை வளாகம். திருச்சிராப்பள்ளி.

மேலும், முழுமையான விவரங்கள் அறிய ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ, 0431-2412726 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம். அல்லது  http://dns1.bdu.ac.in/ptc/docs/job_fair_17_3_2018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.