பேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விண்ணப்பிக்கலாம் வாங்க. தமிழ்நாடு தபால் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு!

இந்திய தபால் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 86 'கிராமின் டக் சேவாக்' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:30 pm

ஆர். வெங்கடேசன்


இந்திய தபால் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 86 'கிராமின் டக் சேவாக்' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: கிராமின் டக் சேவாக் (Gramin Dak Sevaks)

காலியிடங்கள்: 86

தகுதி: பத்தாம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தமிழ்நாடு தபால் துறையால் நடத்தப்படும் எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 16.09.2018

தேர்வு மையம்: சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் நடைபெறும்.

எழுத்துத் தேர்வு பத்தாம் வகுப்பு கல்வி அடிப்படையில்பொது அறிவு, ஆங்கிலம், கணிதம் மற்றும் பொது தமிழ் ஆகிய பாடப்பிரிவுகளில் கேள்விகள் அமைந்திருக்கும். வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2018
 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.