எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்... தமிழக அரசில் 896 ஊராட்சி செயலர் வேலைக்கு அழைப்பு!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள 896 ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:38 pm

ஆர். வெங்கடேசன்

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள 896 ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அந்த பகுதியைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 896

பணி: ஊராட்சி செயலர்

மாவட்டங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்: 
1. காஞ்சிபும் - 44 (www.kanchi.tn.nic.in)
2. கடலூர் - 56 (www.caddalore.tn.nic.in)
3. தேனி - 10 (www.theni.tn.nic.in)
4. ஈரோடு - 27 (www.erode.tn.nic.in)
5. திருவாரூர் - 27 (www.thiruvarur.tn.nic.in)
6. திண்டுக்கல் - 33 (www.dindigal.tn.nic.in)
7. பெரம்பலூர் - 12 (www.perambaloor.tn.nic.in)
8. கோவை - 27 (www.coimbatore.tn.nic.in)
9. திருவள்ளூர் - 39 (www.krishnagri.tn.nic.in)
10. கிருஷ்ணகிரி - 25 (www.karur.tn.nic.in)
11. நீலகிரி -12 (www.nilgris.tn.nic.in)
12. அரியலூர் - 25 (www.ariyalur.tn.nic.in)
13. திருவண்ணாமலை - 69 (www.tiruvannamalai.tn.nic.in)
14. தூத்துக்குடி - 28 (www.thoothukudi.tn.nic.in)
15. விருதுநகர் - 12 (www.virudhunagar.tn.nic.in)
16. வேலூர் (www.vellore.tn.nic.in)
17. திருநெல்வேலி - 34 (www.tirunelveli.tn.nic.in)
18. கரூர் - 14 (www.karur.tn.nic.in)
 
மேற்கண்ட பணியிடங்கள் இனசுழற்சி அடிப்டையில் நிரப்பப்படவுள்ளன. பிற்படுத்தப்பட்டோர் - முன்னுரிமையற்றவர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம்கள் - முன்னுரிமைப் பெற்றவர் பிரிவு, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் - முன்னுரிமையற்றவர் ஆகிய இனசுழற்சி அடிப்படையில் இப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 

சம்பளம்: மாதம் ரூ.7,700 மற்றும் இதர படிகள் வழங்கப்படும். 

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான வயது வரம்பு 21 முதல் 35 வரை. இதர வகுப்பினருக்கான வயது வரம்பு 21 முதல் 30 வரை. 

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். காலியிடம் ஏற்பட்டுள்ள வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: காலியாக உள்ள ஊராட்சி அலுவலகங்களில் மேற்கண்ட பணிக்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். மாவட்ட அரசு இணையதளங்களில் இருந்தும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். தகுதியானோர், குறைந்தபட்ச கல்வித் தகுதிக்கான சான்று நகல், சாதிச் சான்று நகல், இருப்பிடச் சான்று நகல், வருமானச் சான்று நகல், முன்னுரிமை கோருவதற்கான சான்று நகல், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை நகல், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து ஏப். 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள்  சம்மந்தப்பட்ட வட்டாட்சியருக்குக் கிடைக்குமாறு நேரில் அல்லது அஞ்சலில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதை நினைவில் கொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வுக்கான தேதி, இடம் குறித்த விவரங்கள் அழைப்பு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.

மேலும் முழுமையான விவரங்கள் அனைத்து மாவட்ட இணையதள முகவரியில் சென்று தெரிந்துகொள்ளலாம். What,s New-பகுதியை கிளிக் செய்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.