சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 33

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும்

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:28 pm

ஆர். வெங்கடேசன்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், ஆகஸ்ட் 28 முதல் மாதிரி வினா-விடை பகுதி தொகுத்து தினந்தோறும் தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்.
1. கடைசி சந்தல அரசனை தோற்கடித்தவர் - குத்புதீன் ஐபக்
2. ராஜபுத்திரர்களின் சமுதாய அமைப்பு எதன் அடிப்படையில் இருந்தது - நிலமானிய முறை
3. ராஜபுத்திர பெண்கள் பின்பற்றிய பழக்கம் - ஜவ்ஹர் முறை
4. ஜவ்ஹர் முறை என்பது - போரின் தோல்வியெனில் தீக்குளித்தல்
5. ராஜபுத்திரர்கள் எந்த இடத்தில் சமணர் கோவிலை கட்டினர் - தில்வாரா
6. முகமது கஜினியன் காலம் - கி.பி.990 - 1030
7. இந்தியாவின் மீது பலமுறை படையெடுத்து வந்த மன்னன் - முகமது கஜினி
8. முகமது கஜினியின் தந்தை - சபக்திஜின்
9. முகமது கஜினியின் தலைநகரம் - இன்றைய ஆப்கானில் உள்ள கஜினி
10. முகமது கஜினி பஞ்சாப் மீது படையெடுத்தது எப்போது - 1001
11. பெஷாவாரில் நடந்த போரில் முகமது கஜினியிடம் தோல்வி கண்ட மன்னன் - ஜெயபாலன்
12. முகமது கஜினி மீண்டும் பஞ்சாப் மீது படையெடுத்த ஆண்டு - 1008
13. முகமது கஜினியின் சோமநாதபுரம் படையெடுப்பு நடைபெற்றது எப்போது - 1025
14. முகமது கஜினியின் இந்தியாவின் மீது எத்தனை முறை படையெடுத்தார் - 17
15. முகமது கஜினி படையெடுப்பின் நோக்கம் - விலை மதிப்புள்ள பொருட்களைக் கொள்ளையடிப்பதற்கு
16. முகமது கோரியின் காலம் - 1173 - 1206
17. குத்புதீன் ஐபக் ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டு - 1206
18. குதுப்மினாருக்கு அடிக்கல் நாட்டியவர் - குத்புதீன் ஐபக்
19. குத்புதீன் ஐபக்கை அடுத்து ஆட்சிக்கு வந்தவர் - இல்டுமிஷ்
20. குதுப்மினாரைக் கட்டி முடித்தவர் - இல்டுமிஷ்
21. இல்டுமிஷ் காலத்தில் சீனாவைத் கைப்பற்றியவர் - செங்கிஸ்கான்
22. இல்டுமிஷ் மறைவிற்குப்பின் ஆட்சிக்கு வந்தவர் - மகள் ரசியா
23. செங்கிஸ்கான் யார் - மங்கோலியத் தலைவன்
24. தில்லி சுல்தானிய அரசின் முதல் பெண் அரசி - ரசியா
25. ரசியாவைச் சிறைப்பிடித்தவர் - பாடிண்டா பகுதி ஆளுநர் அல்தூனியா
26. ரசியாவை மனழம் புரிந்தவர் - சிறை எடுத்த அல்தூனியா
27. அல்துனியா - ரசியா இருவரும் (கணவன்-மனைவி) தில்லி மீது படையெடுத்த ஆண்டு - 1240
28. ரசியாவின் தில்லி படையெடுப்பில் நிகழந்தது என்ன - கணவன்-மனைவி இருவரும் கொல்லப்பட்டனர்
29. அடிமை வம்சத்தில் மிக முக்கியமான அரசன் - பால்பன்
30. பால்பன் யாருக்குப்பின் ஆட்சிப் பொறுப்பேற்றார் - நாசிர் உத்தின் முகமது
31. பால்பன் ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டு - 1266
32. வங்காளக் கலகம் ஒடுக்கப்பட்ட ஆண்டு - 1279
33. இப்ராஹிம் லோடி பானிபட்போரில் யாரிடம் தோற்றார் - பாபர்
34. பால்பன் வைத்திருந்த வலிமை வாய்ந்த படை - ஒற்றர் படை
35. பால்பனுக்குப்பின் ஆட்சிக்கு வந்தவர் - ஜலாலுதீன் கில்ஜி
36. கில்ஜி வம்சத்தின் காலம் - 1290 - 1320
37. ஜலாலுதீன் கில்ஜி எத்தனை ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார் - 6 ஆண்டுகள்
38. அலாவுதீன் கில்ஜி யார் - ஜலாலுதீன் கில்ஜியின் மருமகன்
39. அலாவுதீன் கில்ஜி பெரும் பொருள் குவித்த படையெடுப்பு - தேவகிரி படையெடுப்பு
40. அலாவுதீன் கில்ஜி தம் மாமன் ஜலாலுதீன் கில்ஜியை எவ்வாறு கொன்றார் - வெற்றிக்கு வாழ்த்து கூற வந்தபோது
41. அலாவுதீன் கில்ஜி சிற்றூரை முற்றுகையிட்டு தோற்கடித்த ராஜபுத்திர அரசன் - ராணா ரத்தன் சிங்
42. ராணாரத்தன் சிங் கொல்லப்பட்டதால் தீக்குளித்து இறந்த அவனது மனைவி - ராணி பத்மினி
43. மங்கோலியர்களை அடக்கிய வேந்தன் - அலாவுதீன் கில்ஜி
44. தக்காணப் பகுதியை முதன் முதலில் வென்ற அரசன் - அலாவுதீன் கில்ஜி
45. மாலிக்காபூர் படையெடுத்தால் அலாவுதீனுக்குக் கப்பம் கட்ட ஒத்துக்கொண்ட தேவகிரி அரசன் - ராமச்சந்திர யாதவ்
46. அலாவுதீன் கில்ஜியின் காலம் - மகிழ்ச்சி இல்லாத காலம்
47. அலாவுதீன் கில்ஜிப் பேரரசு முடிவுற்ற காலம் - 1350
48. கில்ஜிப் பேரரசின் கடைசி வேந்தன் யாரால் கொல்லப்பட்டார் - ஜியாசுதீன்துக்ளக்
49. அலாவுதீன் கில்ஜி இறந்தது - 1315
50. மாலிக்காபூர் வெற்றி கண்ட வாரங்கல் காகதீய மன்னன் - பிரதாப ருத்திரன்
                                                                                                                                        தொடரும்....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.