ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இந்திய கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ராமச்சந்திரன்!

இந்திய கம்யூனிஸ்ட் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக டி. ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

CPI Ramachandran

ராமச்சந்திரன் - கோப்புப்படம்

Published On :8 மே 2026, 5:44 pm IST

இந்திய கம்யூனிஸ்ட் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக டி. ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக இன்று நடந்த அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தவெக ஆட்சியமைக்க ஆளுநருக்கு வழங்கப்பட உள்ள ஆதரவுக் கடிதத்தில் ராமச்சந்திரன் கையெழுத்திட்டுள்ளார்.

நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. தளி தொகுதியில் டி.ராமச்சந்திரனும் திருத்துறைப்பூண்டியில் மாரிமுத்துவும் வெற்றி பெற்றனர்.

பேரவைத் தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இடங்கள் தவெகவுக்கு கிடைக்காத நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியிடம் அக்கட்சி ஆதரவு கோரியிருந்தது. இதையடுத்து தவெகவுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரவு தெரிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் வழங்கியுள்ளது.

Summary

T. Ramachandran has been elected as the leader of the Communist Party of India (CPI) legislative group.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.