தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவராக ராஜேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்த நிலையில், நேற்றிரவு நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், கிள்ளியூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ள ராஜேஷ் குமாரை கட்சியின் பேரவைக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த முடிவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்ததாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு பொறுப்பாளருமான கிரிஷ் சோடங்கர் அறிவித்துள்ளார்.
இதனிடையே, தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவளிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Summary
Rajesh Kumar — Leader of the Congress Legislative Party!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









