எடப்பாடி பழனிசாமியின் 4 ஆண்டுகால ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து பேசினார்.
திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து உரையைத் தொடங்கிய முதல்வர் ஸ்டாலின், திமுக வேட்பாளர்கள் அப்துல் வஹாஃப், அவைத் தலைவர் அப்பாவு மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ரூபி மனோகரன், வி.பி. துரை உள்ளிட்டோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
திருநெல்வேலியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2016 ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தைத் தவிர்த்துவிட்டு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியின் நான்கு ஆண்டுகால ஆட்சியை மட்டும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இதில், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சட்டம் - ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்டவைகளையும் அவர் குறிப்பிட்டார்.
பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “பத்தாண்டு அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் நிர்வாகம் சீரழிந்து வளர்ச்சி முடக்கப்பட்டு, மாநிலமே படுபாதளத்துக்கு தள்ளப்பட்டதை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள்.
அதிமுக ஆட்சியின் கடைசி நான்கு ஆண்டுகளில் நடந்த குற்றங்களை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த கொடநாட்டில் கொலைச் சம்பவம், நீட் தற்கொலை, பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக அமைதியான போராட்டம் நடத்திக் கொண்டிருந்த அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இது மட்டுமல்லாமல் தில்லிக்கு காவடி தூக்கி, பொது சிவில் சட்டம், மூன்று வேளாண் சட்டங்கள், மக்கள் விரோத சட்டங்களை ஆதரித்து நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போட்டது, தமிழ்நாட்டின் நிதி உரிமை, மாநில உரிமை ஆகியவற்றை இப்போது நம் மக்கள் இன்று நினைத்தாலும் பீதியடைவார்கள்.
உங்கள் ஆதரவோடு அப்பேற்பட்ட ஆட்சியில் இருந்து உங்களுக்கு விடியலைக் கொடுத்து தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கிறோம்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.
Summary
Chief Minister Stalin severely criticized Edappadi Palaniswami's four-year tenure.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விருதுநகர் பட்டாசு ஆலை பலி எண்ணிக்கை 21-ஆக உயர்வு: முதல்வர் இரங்கல்
வெற்றிச் செய்தி - கறுப்புச் சட்டம் தோற்கடிப்பு: முதல்வர் ஸ்டாலின்

எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்

ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



