சுமார் 450 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததது தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம். இந்தியாவில் உள்ள நூலகங்களில் மிகவும் பழைமையான இந்த நூலகத்தில் தமிழில் 3,817, சம்ஸ்கிருதத்தில் 25,560, தெலுங்கில் 1,045, மராட்டியத்தில் 3,080 ஏட்டுச் சுவடிகளும், 21,041 காகிதச் சுவடிகளும், மன்னர் சரபோஜி சேகரித்த பன்னாட்டு அச்சு நூல்களான கிரீக், லத்தீன், ஜெர்மன், பிரெஞ்ச், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 4,500-க்கும் அதிகமான நூல்களும், அரிய வண்ணப் படங்களின் தொகுப்புகளும், தற்காலத்திய அச்சு நூல்களாக பல்வேறு மொழிகளில் அமைந்த 65,000 நூல்களும் உள்ளன.