கடந்த 2017-ஆம் ஆண்டு அரை இறுதி ஆட்டத்தில், அதற்கு முன்னர் ஆறு முறை கோப்பையை வென்றிருந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய மகளிர் அணியின் தன்னம்பிக்கைக்கு அச்சாரமாக அமைந்தது. கடந்த எட்டு ஆண்டுகளில் இந்திய மகளிர் அணி சீராக வலுவடைந்து வந்தது. ஆடவருக்கு இணையாக ஆட்ட ஊதியம், அதிகமான ஆட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு, மகளிர் பிரீமியர் லீக் போன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மேற்கொண்ட முன்னெடுப்புகளால், ஏழு முறை கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலியாவையும், நான்கு முறை கோப்பையை வென்றுள்ள இங்கிலாந்தையும் நம்பிக்கையுடன் நமது மகளிர் எதிர்கொள்ளும் வாய்ப்பு உருவானது.