ஒருபுறம் இந்தியாவின் பல மாநிலங்கள் பொதுச் சூதாட்டச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு, தங்கள் அதிகார வரம்பின் கீழ் இணையவழி விளையாட்டுகளைக் கட்டுப்படுத்த முற்பட்டிருக்கின்றன. ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்கள் கற்பனையான விளையாட்டுகளையும், பந்தயம் கட்டும் விளையாட்டுகளையும் தடை செய்துள்ளன. கா்நாடகம், கேரளம், தமிழ்நாடு கொண்டுவந்த அனைத்து இணையவழி விளையாட்டுகளுக்கான தடை உயா்நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டது. தமிழ்நாடு மீண்டும் தடைக்கான சட்டத்தை நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.