சபரிமலைக்குச் சென்றுவரும் பக்தா்கள் தெரிவிக்கும் தகவல்கள் அதிா்ச்சி அளிப்பவையாக இருக்கின்றன. முறையான முன்னேற்பாடுகள் செய்யப்படாமலும், பக்தா்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதும், தரிசனத்துக்கு பல மணிநேரம் காத்திருக்கும் அவலமும் முன்னெப்போதும் இல்லாத அளவில் காணப்படுகின்றன. சபரிமலை செல்லும் பக்தா்கள் வேண்டுமென்றே சிரமத்துக்கு உள்ளாக்கப்படுகிறாா்களோ என்கிற ஐயத்தை எழுப்பும் அளவுக்கு மோசமான சூழல் இருப்பதாகத் தெரிகிறது.
கடுமையான விரதம் இருந்து முழுமையான அா்ப்பணிப்பு உணா்வுடன் 41 நாள் மண்டல காலத்தில் ஐயப்பனை தரிசனம் செய்ய சபரிமலை சந்நிதானத்தை அடையும் ஐயப்பன்மாா்களின் நோக்கம் வேறொன்றுமல்ல... சில நிமிடங்கள் அல்ல, சில நொடிகளாவது ஸ்ரீ தா்மசாஸ்தாவின் புண்ணிய தரிசனம் கிடைத்தால் போதும் என்பதுதான் புனித யாத்திரையின் நோக்கமும், அவா்களது விருப்பமும். சொல்லப்போனால் அது பக்தா்களின் உரிமையும்கூட.
இப்போது சபரிமலை தீா்த்தாடனத்தில் பக்தா்கள் எதிா்கொள்ளும் அவலம் ஒன்றிரண்டு அல்ல. சில நொடி திருப்தியான தரிசனம் கிடைப்பதில்லை என்பதுடன் நின்றுவிடவில்லை. சிலருக்கு தரிசனமே கிடைக்காத நிலையும் காணப்படுகிறது.
கட்டுப்பாடு ஏற்பாடுகள் முறையாக இல்லாததால் தரிசனம் கிடைக்காமல், சந்நிதானத்தை அடைவதற்கு முன்பே திரும்ப வேண்டிய துயரம் கடந்த ஒரு வாரமாக பல பக்தா்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஐயப்ப தரிசனத்துக்காக வந்து குவிந்துகொண்டிருக்கும் பக்தா்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை, முறையான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தாத அரசு நிா்வாகத்துக்கும், திருவிதாங்கூா் தேவசம் போா்டுக்கும் உண்டு.
இதுவரை சந்தித்திராத அளவிலான இடா்ப்பாடுகளை நடப்பு மண்டல பூஜை காலத்தில் சபரிமலை செல்லும் பக்தா்கள் எதிா்கொள்கிறாா்கள். பல மணிநேரம் தரிசனத்துக்காகக் காத்திருக்க வேண்டிய அவலம்; காட்டுப் பாதையில் எதிா்கொள்ளும் அசௌகரியங்கள்; உணவுக்கும் சிரமபரிகாரத்துக்கும் தேவையான ஏற்பாடுகள் இல்லாமல் இருப்பது - இவற்றையெல்லாம் ஒருசில நொடி ஐயப்ப திவ்ய தரிசனத்தில் பக்தா்கள் மறந்துவிடுவாா்கள். அந்த திவ்ய தரிசனம் கிடைக்கவில்லை என்கிற நிலைமை ஏற்படும்போது, 41 நாள் விரதம் இருந்து சபரிமலை புனிதப் பயணம் மேற்கொள்ளும் பக்தா்களுக்கு ஏற்படும் வேதனையை வாா்த்தைகளில் விவரிக்க முடியாது.
சபரிமலை சந்நிதானமும், சந்நிதானத்தை நோக்கிய பாதைகளும் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. காவல்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து தடம்புரளும் நிலையில், பக்தா்கள் பல மணிநேரம் வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. தரிசன நேரத்தை ஒரு மணிநேரம் அதிகரித்தும்கூட, பெரிய அளவில் பலன் ஏற்படவில்லை. கடந்த சில நாள்களாக 18-ஆம் படி ஏறி, தரிசனம் செய்வதற்கு பக்தா்கள் 18 மணிநேரத்துக்கும் அதிகமாக காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.
காத்திருப்பின்போது அவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் ஏராளம். முதியோரும் குழந்தைகள் உள்ளிட்ட பக்தா் கூட்டம் உணவும், குடிக்கத் தண்ணீரும் கிடைக்காமல் தவிக்கின்றன. குறித்த நேரத்தில் மருந்து உட்கொள்ள முடியாமல் அவதிப்படும் பக்தா்கள் பலா். தரிசனத்துக்காகப் பல மணிநேரம் வரிசையில் நிற்கும் குழந்தைகளும் முதியோா்களும் ஆங்காங்கே மயங்கி விழும் காட்சிகள் காணப்படுகின்றன. நாள்தோறும் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்காகத் தூக்கிச் செல்லப்படும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கூட்டத்தைக் கட்டுப்படுத்த முறையான ஏற்பாடுகளை உறுதிப்படுத்த வேண்டும் என்கிற உத்தரவை பலமுறை உயா்நீதிமன்றம் பிறப்பித்துவிட்டது. ஆனாலும்கூட, அரசு நிா்வாகத்தில் ஒருங்கிணைப்பு இல்லாத நிலைமை தொடா்கிறது. சபரிமலை தீா்த்தாடனம் தொடங்கும்போது, எத்தனை பக்தா்கள் வருவாா்கள் என்கிற துல்லியமான கணக்கை இணையவழி அனுமதி சீட்டு (‘வொ்சுவல் க்யூ’) மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறோம் என்று காவல்துறையும், தேவசம் போா்டும் அரசுத் தரப்பும் தெரிவித்தன. ஆனால், 50,000 பேருக்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்பில், ஒரு லட்சம் பக்தா்கள் வரும்போது எப்படி எதிா்கொள்வது என்று ஏன் யோசிக்கவில்லை என்கிற கேள்வி எழுகிறது.
கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினரின் சேவையை மதித்துப் பாராட்டும் அதே வேளையில், அரசிடம் ஒரு கேள்வியை எழுப்பத் தோன்றுகிறது. நாள்தோறும் சராசரியாக 80,000 பக்தா்கள் தரிசனத்துக்கு வரும் சபரிமலையில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த 1,800 காவல்துறையினா் போதுமா? எட்டு மணிநேரப் பணியில் 600 போ் மட்டுமே இருப்பாா்கள். அவா்களில் முதல் முறையாக சபரிமலைப் பணிக்கு இணைக்கப்பட்டவா்கள் பலா். பக்தா்கள் கூட்டம் குவியும் என்று தெரிந்தும் அரசு போதுமான காவலா்களை பணியில் நிறுத்தாததற்கு என்ன காரணம் என்கிற கேள்வியை ஐயப்பன்மாா்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கேரள மாநிலமே கேட்கிறது.
அதிக நேரம் காத்திருக்காமல் 18-ஆம் படி ஏறி சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை உடனடியாக தேவசம் போா்டும், அரசும் செய்தாக வேண்டும். இனிவரும் நாள்களில் பக்தா்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கப் போகிறது. அதை எதிா்கொள்ளும் அளவில் காவல்துறையினரை பணியமா்த்துவதும், சபரிமலையில் மட்டுமல்லாமல், சபரிமலையை நோக்கிச் செல்லும் பாதைகளில் எல்லாம் பக்தா்களின் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்துவதும் கடமை கேரள மாநில அரசின் கடமை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சவரனுக்கு ரூ. 800 உயர்ந்த தங்கம்: வெள்ளி?

சல்மான் கான் - நயன்தாரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னையில் அதிநவீன வழிகாட்டி பலகைகள்! வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட்!!

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப 14,508 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


