தேவரனையக் கயவர்!
அரசுடைமை வங்கிகளில் ரூ.9,000 கோடிக்கும் அதிகமாகக் கடன் பெற்றுத் திருப்பித் தராமல் வெளிநாட்டுக்குப் போய்விட முடியும் என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை. விஜய் மல்லையா விவகாரம் திடீர் சம்பவமல்ல. இது இப்படித்தான் நடக்கும் என்பது கடன் கொடுத்த வங்கிகளுக்கு மட்டுமல்ல, நாட்டிலுள்ள கண்காணிப்பு அமைப்புகளுக்குமே நன்றாகத் தெரியும் என்பதுதான் உண்மை.









