அந்த மாற்றம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதுதான் கேள்வி. கட்சியின் அடிப்படை உறுப்பினர்களை முறைப்படுத்தி, முறையாகத் தேர்தல் நடத்தி, கட்சித் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை மாவட்டங்களிலும், மாநிலங்களிலும், தேசிய அளவிலும் ஏற்பட்டால் மட்டுமே, காங்கிரஸின் வருங்காலம் உறுதி செய்யப்படும். ஒருவேளை அதனால் நேரு குடும்பத் தலைமை அகற்றப்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்ள இன்றைய தலைமை துணியாவிட்டால் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும், பிரியங்கா வதேராவும் வலம் வருவார்களே தவிர, காங்கிரஸ் பலமான கட்சியாக தொடர முடியாது!