தற்போது அந்த நிபந்தனை மூன்று ஆண்டுகளுக்கு வலியுறுத்தப்படாது என்று தளர்த்தப்பட்டுள்ளது. அதற்கடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, மொத்தத்தில் 30% கொள்முதல் செய்திருந்தால் போதும் என்றும் தளர்த்தப்பட்டுள்ளது. அதாவது, நான்காம் ஆண்டு முதல் 10% அல்லது 15% என்று உள்நாட்டு கொள்முதலை மெல்லத் தொடங்கலாம். இத்தகைய சலுகைகள் நிச்சயமாக ஆப்பிள், லீஎகோ போன்ற கணினித் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் நேரடியாக இங்கேயே உற்பத்தி செய்து மற்றும் கடை விரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தக்கூடும். இதனால் ஆப்பிள், லிஎகோ நிறுவனங்களின் கணினி, செல்லிடப்பேசி விலை குறைய வாய்ப்புள்ளது. ஆனால், வேலைவாய்ப்புக்கு எந்த அளவுக்கு வாய்ப்பிருக்கும் என்பது தெரியவில்லை.