சில பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்வார்கள் என்கிற நம்பிக்கையில், விமான நிறுவனங்கள் கூடுதலான இடங்களை விற்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றன. அப்படி இருந்தும், யாராவது பயணத்தை ரத்து செய்தால், அதற்குக் கடுமையான கட்டணக் குறைப்புகளைச் செய்து மிகக் குறைவான பணத்தை மட்டுமே திருப்பித் தருகிறார்கள். புதிய கொள்கைப்படி, ரத்துக் கட்டணம் அடிப்படைப் பயணக் கட்டணத்தைவிட அதிகமாக இருத்தல் கூடாது. அதேபோல, அதிகமாக இடங்களை விற்றுவிட்டு, யாருமே பயணத்தை ரத்து செய்யாமல் போனால், பல பயணிகள் இடம் தரப்படாமல் பரிதவிக்க விடப்படுகிறார்கள். இதற்கான இழப்பீடு கடுமையாக அதிகரிக்கப்படுகிறது. விமான தாமதத்திற்கும் பயணிகளுக்கு இழப்பீடும் வசதிகளும் செய்து தரப்பட வேண்டும் என்கிறது புதிய கொள்கை.