இந்தியாவில் ஆண்டுதோறும் பத்து லட்சத்திற்கும் அதிகமான பேர் புற்று நோய் பாதிப்புக்கு உள்ளாவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பயனளிக்காமல் மரணம் அடைகிறார்கள். அதைவிட வேதனை, ஏறத்தாழ 20% பேர் சிகிச்சை பெற வழியில்லாமலோ, நோயால் தாக்கப்பட்டிருப்பதே தெரியாமலோ மரணமடைகிறார்கள் என்பதுதான். ஆண்டொன்றிற்கு ரூ.14,49,490 கோடி வரி வருவாய் உள்ள ஒரு நாட்டில், அடிப்படை சிகிச்சைகூடத் தரப்படாமல், அதற்கு வழியில்லாமல் பலர் மரணமடைகிறார்கள் என்றால், இந்தியா வல்லரசாகி என்ன பயன்?