1970-ஆம் ஆண்டு 2,000 தொழிலாளர்களுடன் தொடங்கப்பட்ட, சேலம் தேனிரும்பு ஆலை கடந்த ஆறு ஆண்டுகளாக நஷ்டத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. 2011-12இல் ரூ.100 கோடியாக இருந்த நஷ்டம், 2015-16இல் ரூ.349 கோடியாக உயர்ந்துள்ளது. இத்தனைக்கும் சேலம் தேனிரும்புக்கு மிகப்பெரும் வரவேற்பு இருக்கிறது. ஆனாலும், வரவேற்புக்கு ஏற்ப உற்பத்தி செய்யப்படுவதில்லை. ஊழல், அதிக பணியாளர்கள் என நஷ்டத்துக்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன. எனவே தனியாருக்கு 51% பங்குகளை விற்று, ஆலையை அவர்களிடம் ஒப்படைத்துவிடுவது என்று சில ஆண்டுகளுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அரசியல் அழுத்தம் காரணமாக அது கைவிடப்பட்டது. "புலி வரு