வெளிநாட்டில் மருத்துவக் கல்வி பயின்று இந்தியாவில் மருத்துவ ஆலோசனை, சிகிச்சை அளிக்க வேண்டுமானால், இந்திய மருத்துவக் கவுன்சில் ஆண்டுக்கு இரு முறை நடத்தும், வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தகுதித் தேர்வு எழுதி, தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து ஆகிய ஐந்து நாடுகளில் மருத்துவக் கல்வியின் தரம் அதிகம் என்பதால் அங்கேயுள்ள அங்கீகாரம் பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டம் பெற்ற மருத்துவர்கள் இந்தத் தகுதித் தேர்வை எழுத வேண்டிய அவசியம் இல்லை.