மேஜர் ஜான் பென்னிகுவிக் என்கிற ஆங்கிலேய பொறியாளரால், வீணாகக் கடலில் கலக்கும் பெரியாறு நதியின் வெள்ளத்தை வைகை ஆற்றிற்குத் திருப்பிவிட்டு ஏறத்தாழ 1,69,411 ஏக்கர் விவசாய நிலப்பரப்புக்குப் பாசன வசதி ஏற்படுத்திக் கொடுக்க நிறைவேற்றப்பட்ட நல்லதொரு திட்டம்தான், நீதிமன்றங்களில் நியாயம் கேட்டுக் கடந்த பல ஆண்டுகளாக அல்லாடிக் கொண்டிருந்தது. நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழைய அணை என்பதால், அதன் கட்டுமானம் பலம் இழந்திருக்கக்கூடும் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில்தான் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான சர்ச்சை எழுப்பப்பட்டது.