கிரஸ் கூட்டணியும், இடதுசாரிக் கூட்டணியும் என்று மாறிமாறி ஆட்சிக்கு வருவதால், மத்திய ஆட்சியில் அமரும் தேசியக் கட்சிகளைப் பொருத்தவரை, தமிழகத்தைப் புறக்கணித்து அந்த மாநிலங்களின் பிரச்னைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து வந்தன. அது காவிரிப் பிரச்னையாக இருந்தாலும், முல்லைப் பெரியாறாக இருந்தாலும் காங்கிரúஸா, கம்யூனிஸ்டோ, பா.ஜ.க.வோ என்று எந்த தேசியக் கட்சியாக இருந்தாலும் தமிழகத்தின் நலனைவிட கர்நாடக, கேரள நலனில்தான் அக்கறை காட்டின. தமிழகத்தின் நலனைப் பாதுகாத்து, அந்த மாநிலங்களில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை இழந்துவிட தேசியக் கட்சிகள் தயாராக இருக்கவில்லை.