புதியதோர் உலகம் செய்வோம்!
"பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்' என்ற சொலவடைக்கு ஏற்ப, ஏற்கெனவே ஒரு மலேசிய விமானம் கடலில் விழுந்து, 300-க்கும் மேற்பட்ட பயணிகள் பலியான சம்பவத்திலிருந்து மீளாத நிலையில், இப்போது மீண்டும் ஒரு விபத்தையும் 298 பேரின் உயிர்ப்பலியையும் எதிர்கொண்டுள்ளது மலேசிய ஏர்லைன்ஸ்.







