""நீதித் துறையில் உயர் பதவிகளுக்கான நியமனத்தில் தலைமை நீதிபதியின் ஒப்புதல் இருக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவிப்பவர்கள், தலைமை நீதிபதியின் பாரபட்சமற்ற தன்மையையும், மனமாச்சரியங்கள் இல்லாத நிலைப்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு தங்களது கருத்தை வெளியிடுகிறார்கள். உச்சநீதிமன்ற நீதிபதி நிச்சயமாக கண்ணியம் மிக்க, சார்பற்ற நீதிமானாக இருப்பார் என்பதில் எனக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லைதான். ஆனாலும், அவரும் எல்லா மனிதர்களையும் போல தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும், உணர்வுகளும், மனமாச்சரியங்களும் உள்ள நம்மைப் போன்ற மனிதர்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நீதிபதிகள் நியமனத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு முழு அதிகாரத்தையும் அளிப்பது என்பது, குடியரசுத் தலைவருக்கோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கோ தரப்படாத தன்னிச்சையான அதிகாரத்தை அவருக்கு அளிப்பதாகிவிடும். அதனால், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் "ஒப்புதல்படி' என்கிற கருத்து மிகவும் ஆபத்தானது'' என்று மே 24, 1949 அன்று நடந்த அரசியல் நிர்ணய சபை விவாதத்தில் பாபாசாகேப் அம்பேத்கர் மிகவும் தெளிவாகவும், பட்டவர்த்தனமாகவும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்.