மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 8(4), "தண்டனை விதிக்கப்பட்டவர் எம்.பி., எம்.எல்.ஏ.வாக இருந்து, 90 நாள்களுக்குள் மேல் முறையீடு செய்து, தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால், அவர் தொடர்ந்து பதவி வகிக்கலாம்' என்று கூறுகிறது. சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, தண்டனைபெற்ற நாள் முதலே அவர் தகுதி இழந்து விடுவதால் பதவியில் தொடர முடியாது என்று கூறியதால், அந்தத் தீர்ப்பைச் செல்லாததாக்க அவசரச் சட்டம் பிறப்பிக்க முற்பட்டிருக்கிறது மத்திய அரசு. இப்படியே அவசரச் சட்டங்களின் மூலம் அரசு நடத்தப்படுமானால், பிறகு நாடாளுமன்றம் எதற்கு, விவாதம் எதற்கு என்கிற கேள்விகளும் எழுகின்றன.