வல்லுறவுக்கு ஆளான பெண்ணின் பெயரை, புகைப்படத்தை பயன்படுத்துவதில்லை என்பது எப்படி பொதுமரபோ, குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட சிறார்களின் புகைப்படங்களை வெளியிடக்கூடாது என்பது எவ்வாறு பொதுமரபோ, அதேபோன்று, ஒரு இடத்தில் நடந்த சம்பவம் பிற இடங்களில் வசிக்கும் பிற மதத்தினரிடையே அச்சத்தையும், அவநம்பிக்கையையும், விரோதத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகத்தான் எந்தெந்த சாதியினர் எந்தெந்த மதத்தினர் மோதிக்கொண்டார்கள் என்பதைக் குறிப்பிடாமல் சாதிக்கலவரம், வகுப்புக்கலவரம் என்று பொதுவாக தெரிவிக்கும் மரபு கடைப்பிடிக்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் இந்த மரபு மீறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தை கூட்டி, இதுபோன்ற கலவரங்களுக்கு தீர்வு காண முயற்சிக்கும் வேளையில், இப்படி ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட வேண்டிய அவசியம்தான் என்ன?