இந்தியாவில் ஒரு ஊழல் வழக்கில் நியாயம் கிடைக்க 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை நீடிக்கிறதே என்பதற்காக வேதனைப்பட வேண்டியிருக்கிறது. கால்நடைத்துறை மூலம், மாடுகளுக்கு தீவனம், சினைப்படுத்தல் கருவிகள், கால்நடை மருந்துகள் என பலவற்றையும் வாங்கியதாக வெறும் கணக்கு எழுதி, அதற்கான ரசீதுகளையும் வழங்கி அரசு கருவூலத்திலிருந்து ரூ.37 கோடி வரை பணம் பெற்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில்தான் இப்போது, 20 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்கு இத்தனை காலதாமதம் ஏன் என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.