பிரச்னைகளைத் திசைதிருப்புவதன் மூலம் மன்மோகன் சிங் அரசு பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை நிலை. எதிர்க்கட்சிகள் அவையை முடக்குவதை விட்டுவிட்டு, அவர்கள் பதவி விலகி விடலாமே? செய்ய மாட்டார்கள். அவர்களது சம்பளம், படி, தொகுதி மேம்பாட்டு நிதி, ஓய்வூதியம் எல்லாமே நின்று போய்விடும். சரி, பாஜகவோ, மூன்றாவது அணியோ ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும்? அப்போது, 13-வது நாடாளுமன்றத்தில் நடந்ததுபோல, காங்கிரஸ் கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்தி அவையை முடக்கும். அவையை முடக்கும் உத்தியை உருவாக்கியதே அவர்கள்தான். அதுவும் சோனியா காந்தியின் தலைமையில்தான்!