இன்னும் சொல்லப்போனால், குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி பதவியேற்ற பிறகுதான் கருணை மனுக்கள் அதிக எண்ணிக்கையில் பரிசீலிக்கப்பட்டன. மும்பை தாக்குதல் தொடர்பில் அஜ்மல் கசாப், நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தில் அப்சல் குரு ஆகியோரது கருணை மனுக்களை நிராகரித்தவர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிதான். தற்போது பரிசீலிக்கப்பட்ட கருணை மனுக்கள், கே.ஆர். நாராயணன், அப்துல் கலாம், பிரதீபா பாட்டீல் ஆகியோர் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த காலம் முதலாகவே பரிசீலிக்கப்படாமல் இருந்தவை என்பதையும் விமர்சனம் செய்வோர் எண்ணிப்பார்க்க வேண்டும்.