கூட்டு சதி
அலைக்கற்றை ஏலத்தில் எதிர்பார்த்த தொகையில் மூன்றில் ஒரு பங்குதான் கிடைத்துள்ளது. ஜிஎஸ்எம் பிரிவில் அரசுக்கு ரூ.28,000 கோடி கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இந்த ஏலத்தின் மூலம் அரசுக்குக் கிடைத்துள்ள ஒப்பந்தப்புள்ளிகள் ரூ.9,400 கோடி வரைதான்.










