"நம்முடைய மக்களின் நம்பிக்கைகளையும் அபிலாஷைகளையும் பிரதிபலிக்கும் அகில இந்தியத் தன்மை வாய்ந்த ஒரே நிறுவனம் இந்திய தேசிய காங்கிரஸ்தான், எனவே, இப்போதைய சிரமங்களுக்கு இடையே நாட்டுக்கு வழிகாட்டி, நம்முடைய சமூக பொருளாதார அமைப்புகளில் பெரிய, முக்கியமான மாறுதல்களைச் செய்து முன்னேற்றிச் செல்லும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டுக்கு வழிகாட்ட இந்திரா காந்தி தலைவராக இருக்கும் வாய்ப்பு அதற்குக் கிடைத்தது. அவருடைய (இந்திரா காந்தியினுடைய) உத்வேகம் மிகுந்த தலைமையின் கீழ் இந்த மாறுதல்களுக்கு வேண்டிய அடித்தளத்தை அமைப்பதில் கணிசமான, குறிப்பிடத் தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.