அனுமதியை எளிதாக்க கோரிக்கை: சுற்றுலா ஆர்வலர் சுந்தர்ராமன் கூறியது: பூண்டி நீர்த்தேக்கத்தை பொதுப்பணித்துறையும், சுற்றுலாத்துறையும் இணைந்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். மேலும், அதிகரிக்கும் வகையில் சிதைந்துள்ள பாம்புப் பண்ணையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். அதேபோல் பூங்காக்களில் சிதிலமடைந்து காணப்படும் சிலைகள், பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் பொழுதுபோக்கும் ஊஞ்சல், கொடை ராட்டினம், சறுக்கு விளையாட்டு, ஏற்ற இறக்க சமதூக்கி விளையாட்டு உள்ளிட்டவைகளை சீரமைக்க வேண்டும்.