இந்த வரிசையில், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த இனாரா எனும் குழந்தையும் இந்த அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு நிதி திரட்டப்பட்டு வருவதாகவும் ஒரு செய்தி தமிழில் பரவத் தொடங்கியது. இதுகுறித்த சம்மந்தப்பட்ட நபர்களை அழைத்துப் பேசியபோது, கேரளத்தில் ஏராளமான குழந்தைகள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு வருவதால், நிதி திரட்டலில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறினர். மேலும் இதன் காரணமாகவே, மற்ற மாநிலங்களிலும் நிதி திரட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று முடிவெடுத்து செயல்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.