உண்மையில் தொடுதல், கண்ணீர், வேர்வை, உமிழ்நீர், சிறுநீர் போன்றவற்றால் எச்.ஐ.வி. வைரஸ் பரவுவதில்லை. எய்ட்ஸ் நோயுள்ளவர்களுடன் ஒரே தட்டில் சாப்பிடலாம், ஒரே போர்வையில் உறங்கலாம்.
ரத்தத்தின் மூலம் எச்.ஐ.வி. வைரஸ் பரவுகிறது என்றாலும், கொசுக்கள் மூலம் அவை பரவுவதில்லை. ஏனெனில் கொசுக்கள் கடிக்கும்போது ரத்தத்தை உடலில் செலுத்துவதில்லை. மேலும் பூச்சிகளிடம் எச்.ஐ.வி. வைரஸ் சிறிது நேரம் மட்டுமே உயிருடன் இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள், அதேபோன்று அறிகுறிகள் இல்லை என்றால் எச்.ஐ.வி. வைரஸ் தொற்றவில்லை என்று அர்த்தமாகாது. அறிகுறிகள் இல்லாமலும் எச்.ஐ.வி. வைரஸ் பரவும். படிப்படியாக நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும்போதுதான் வயிற்றுப்போக்கு, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும்.