இதன் ஒரு கட்டமாக, கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரியில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான முயற்சிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. மூன்றே மாதத்தில் 13 கோடி பேரின் ஆதார் தகவல்கள் பெறப்பட்டன. இதற்கிடையே, அதே ஆண்டு ஆகஸ்டு மாதம், தேர்தல் ஆணையத்தின் முயற்சிக்கு உச்ச நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டது. ஆதார் கட்டாயமாக்கப்படுவது தொடர்பான வழக்கு ஒன்றில், தனி மனித சுதந்திரம் காப்பது அடிப்படை உரிமை என குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் தகவல்களை இணைப்பதற்கான சட்டம் இயற்றப்படுவதன் மூலமாக இதனை நெறிபடுத்த முடியும் என்றுஉத்தரவிட்டது. இதன் காரணமாக, ஆதார் எண் சேகரிப்பு பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டன.